தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் தெரிவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் தெரிவு தொடர்பான உத்தியோகபூர்வமற்றதான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனடிப்படையில் ஞா.ஸ்ரீநேசன், சீ.யோகேஷ்வரன்,இ.சாணாக்கியன், மா.உதயகுமார், நளினி இரட்ணராசா ஆகியோர் வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த தெரிவின் அடிப்படையில் மட்டக்களப்பு தொகுதியில் ஞா.ஸ்ரீநேசன், மா.உதயகுமார், நளினி இரட்ணராசா ஆகியோர் போட்டியிடவுள்ள அதேவேளையில் பட்டிருப்பு தொகுதியில் சாணக்கியன் தெரிவுசெய்யப்பட்டள்ளதுடன் கல்குடா தொகுதிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளாh.

இதனடிப்படையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு ஐந்து பேர் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த வேட்பாளர் தெரிவு தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts