தமிழர்கள் தங்கள் உறவுகளை நினைவுகூருவதற்கு அரசாங்கம் வழிவிடவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்

யுத்ததின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு எங்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்கவேண்டும்.நேற்று முன்தினம் கூட அன்னை பூபதியின் நினைவுத்தூபியில் நினைவுகூருவதற்கு தடைகள் விதிக்கப்பட்டது.

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது.அந்த உரிமையினை அரசாங்கம் தமிழர்களுக்கு முழுமையாக வழங்கவேண்டும்.போரில் இறந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தவேண்டும் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் நாங்கள் அஞ்சலி செலுத்தவேண்டும்.

இலங்கையினை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவுபெறுகின்றது.இந்த தாக்குதலி உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரம் நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்  நடைபெற்றன.

 

மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு மாநகரசபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள உயிர்த்த ஞாயிறு படுகொலை நினைவுத்தூபியில்  விசேட நிகழ்வு நடைபெற்றது.

உயிர்த்த ஞாயிறு படுகொலை நடைபெற்ற நேரத்தில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மாநகரசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு மெழுகுதிரி ஏற்றப்பட்டு உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவுத்தூபியில் உயிர்நீர்த்தவர்களின் ஆத்ம சாந்திக்காக அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த மாநகர முதல்வர்,

இன்று நாங்கள் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து காந்தி சதுக்கத்தில் மாநகரசபையினால் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் குண்டுத்தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் எங்களது அஞ்சலி நிகழ்வினை செய்திருந்தோம்.

குண்டுத்தாக்குதலை நினைவுகூரவேண்டும் என்பதற்காக முதன்முதலாக தூபினை அமைத்தது மட்டக்களப்பு மாநகரசபை.மாநகரசபை சார்பாக நாங்கள் இந்த தூபியை அமைத்தபோது எங்களை விமர்சித்தவர்கள் இன்று அதிகாலையில் வந்து இங்கு அஞ்சலியை செலுத்திச்சென்றுள்ளனர்.இதனை நாங்கள் வரவேற்கின்றோம்.சரியான இடத்தில் இந்த தூபி அமைக்கப்பட்டுள்ளது.மக்கள் அமைதியான சூழ்நிலையில் வந்து அஞ்சலிகளை செலுத்தக்கூடியவாறு இந்த தூபி அமைக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் இந்தநேரத்தில் எங்களுக்கு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பினை வழங்கிவருகின்றனர்.

இதேபோன்று யுத்ததின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு எங்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்கவேண்டும்.நேற்று முன்தினம் கூட அன்னை பூபதியின் நினைவுத்தூபியில் நினைவுகூருவதற்கு தடைகள் விதிக்கப்பட்டது.

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது.அந்த உரிமையினை அரசாங்கம் தமிழர்களுக்கு முழுமையாக வழங்கவேண்டும்.போரில் இறந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தவேண்டும் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் நாங்கள் அஞ்சலி செலுத்தவேண்டும்.

அரசாங்கம் அனைவருக்கும் சமசந்தர்ப்பம் வழங்கப்பட்டு சம நோக்குடன் கையாளவேண்டும்.அவ்வாறான நிலையேற்பட்டால் யுத்தகாலத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர அரசாங்கம் எங்களுக்கு அனுமதி வழங்கவேண்டும் என தெரிவித்தார்.

ஏப்ரல் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு மாநகரசபையினால் ஞாபகார்த்த நினைவுத்தூபி அமைத்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இன்று அதிகாலையிலேயே இங்குவந்த நினைவுத்தூபியில் நினைவு தினம்; அனுஸ்டித்ததை வரவேற்பதாக இங்கு கருத்து தெரிவித்த பிரதி முதல்வர் க.சத்தியசீலன் தெரிவித்தார்.

Related posts