தமிழர்கள் மரபை நிலை நிறுத்தும் வகையில் அன்னை பூபதி தியாக திலீபன் ஜோசப்பரராசசிங்கம் ஆகியோர் சிலைகளை நிறுவ கோரிக்கை

கோறளைப்பற்று பிரதேச சபை எல்லைக்குள் உட்பட்ட வீதி சுற்று வட்டங்களில் தமிழர்கள் மரபை நிலை நிறுத்தும் வகையில் அன்னை பூபதிஇ தியாக திலீபன்இ ஜோசப்பரராசசிங்கம் ஆகியோர் சிலைகளை நிறுவுவதற்கு முன்வருமாறு கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் கு.குணசேகரம் தெரிவித்தார்.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வு சபையின் கேட்போர் கூடத்தில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!
தமிழுக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் தம் உயிரை துச்சமென மதித்து தன் உயிரினை ஈத்த என் உயிருக்கும் மேலான மாவீரர் தமிழ்ச் செல்வங்களுக்கு எனது இரு கரங்களையும் கூப்பி வணங்குகின்றேன்.
எமது கோறளைப்பற்று பிரதேச சபை எல்லைக்குள் உட்பட்ட கிரான் சுற்று வட்டம்இ கும்புறுமூலை சுற்று வட்டம்இ வாழைச்சேனை பெற்றோல் நிலைய சுற்று வட்டம் ஆகிய மூன்று சுற்று வட்டங்களுக்கும் தமிழர்கள் அடையாளங்கள் அழிந்து வருவதால் அதனை தமிழர்கள் மரபை நிலை நிறுத்துமாறு அன்னை பூபதிஇ தியாக திலீபன்இ ஜோசப்பரராசசிங்கம் ஐயா இவர்களின் சிலைகளை சுற்று வட்டத்தில் தமிழர்களின் அடையாளமாக நிறுத்த வேணும் என்று தவிசாளரிடம் கோரிக்கையை முன் வைக்கின்றேன்.
மேலும் எமது கிராமங்களில் மணல் ஒழுங்கைகள் அதிகமாக காணப்படுகின்றது. வீதி விளக்குகளும் எமது வட்டாரத்திற்கு தேவைப்படுகிறது. மேலும் எமக்கு வாக்களித்த அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்றி கூறுகின்றேன்.
நீண்ட இடைவேளைக்குப் பின் கிராம மட்டங்களிலும் நகர மட்டங்களிலும் நடாத்தப்பட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினருக்கான தேர்வில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சின்னத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியூடாக போட்டியிட்டு பதினொராம் வட்டாரத்தில் வெற்றி பெற்றேன்.
மேலும் எமது கட்சியானது 2009 மே மாதம் 18 வரை தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களினால் இனப் பிரச்சினைக்கு தீர்வென பேச்சுவார்த்தை மேசையில் வலியுறுத்தப்பட்டு வந்த கொள்கைகளான வட கிழக்கு இணைந்த தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை தமிழ் தேசியம் அதனுடைய இறைமை அங்கீகரிக்கப்பட்ட மக்களின் வேணாபாவை சுமந்து செல்லும் தூய்மையும் நேர்மையும் அர்ப்பணிப்பும் மிக்க அரசியல் இயக்கமான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழிகாட்டலில் பயணிக்க வாய்ப்பு கிடைத்தமையால் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

Related posts