தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் ரகுவிற்கு நினைவேந்தல்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தலைவரும், கிழக்கில் தமிழ் கட்சியை ஆரம்பித்துவைத்தவருமான அமரர் குமாரசாமி-நந்தகோபனின் (ரகு)11ஆம் ஆண்டு நினைவேந்தல் கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் பிரதித்தலைவர் க.யோகவேள் தலைமையில் இன்று வியாழக்கிழமை(14)காலை 11.00 மணியளவில்  நடைபெற்றது.
 

இந்நிகழ்வில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன்,கட்சியின் மகளீர் அணிச்செயலாளர்  செல்வி மனோகர்,பிரதிச்செயலாளர் எஸ்.ஜெயராச், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள்,உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

இவ்நினைவேந்தல் நிகழ்வில் நந்தகோபனின் சிலைக்கு அவரது சகோதரர் நளினகாந்தன் மலர்மாலை அணிவித்து,மலரஞ்சலி செலுத்தி ஈகைச்சுடரேற்றி வைத்தார்.நிகழ்வில் கலந்து கொண்டவர்களும் மலரஞ்சலி செலுத்தி சுடரேற்றி அகவணக்கம்  செலுத்தி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது

Related posts