தமிழ் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி கொவிட் தொற்றால் பலி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் உயிரிழந்துள்ளார்.. நேற்று இரவு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts