தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சிப் பிரமுகர்கள் கூட்டம்

அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான கலந்துரையாடல் நற்பிட்டிமுனை சுமங்கலி மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது.

இந்தக் கூட்டம் அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட கட்சி பிரமுகர்களை சந்திக்கும் இக்கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் அவரது மகனும் பிரதேச சபை உறுப்பினருமான கலையமுதனும் கலந்துகொண்டுள்ளார்.

இந்த கட்சிக் கூட்டத்திற்கு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் கட்சியின் அம்பாறை மாவட்ட மாநகர சபை பிரதிநிதிகள், இளைஞர் அணியினர் கலந்துகொண்டனர்.

மேலும் இக்கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts