தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு புதிய பதில் பொதுச்செயலாளர் நியமிப்பு.

 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது பதவிக்கு கட்சியின் உப செயலாளர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகச் செயலாளர் இன்று(2) தெரிவித்துள்ளார்.

கட்சியின் பொதுச்செயலாளராக செயற்பட்ட பூ.பிரசாந்தன்  தற்போது விளக்கமறியலில் இருப்பதன் காரணமாக  கட்சி செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்காக அவருக்கு பதிலாக இதுவரை காலமும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதிச்செயலாளராக பணிபுரிந்து வந்த ஜெகநாதன் ஜெயராஜ் அவர்கள் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக  தலைமை பணியகத்தினால்  நியமிக்கப்பட்டுள்ளார்  என ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளர்.

Related posts