தவிசாளர் கலையரசன் இராஜினாமா!

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சர்ச்சைக்கு மத்தியில் தெரிவாகியிருக்கும் நாவிதன்வெளி பிரதேசசபைத் தவிசாளர் தவராசா கலையரசன் தனது தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.
 
எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றில் பிரதிநிதியாகச் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன் சட்டப்படி தற்போதைய தவிசாளர் பதவியை இராஜினாமாச்செய்யவேண்டும் என்பதற்காக  இராஜினாமாச்செய்துள்ளார்.
 
கடந்ததேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தோல்வியடைந்தது மாத்திரமல்லாமல் தமிழ்ப்பிரதிநிதித்துவமும் இழக்கப்பட்டிருந்தது.அதனால் த.தே.கூட்டமைப்பிற்குக்கிடைக்கப்பெற்ற ஒரேயொரு தேசியபட்டியல் ஆசனத்தை பலத்த உட்கட்சிச் சர்ச்சைக்கு மத்தியில் கலையரசனுக்கு வழங்கியிருந்தமை தெரிந்ததே.
 
கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரான கலையரசன் நாவின்வெளி பிரதேசசபைக்கு இடம்பெற்ற 2006 உள்ளுராட்சிதேர்தலில் போட்டியிட்டு உதவி தவிசாளராகத் தெரிவானார். பின்னர் 2008இல் தவிசாளரானார். மீண்டும் 2018 உள்ளுராட்சித்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் தவிசாளரானார்.அப்தவியை தற்போது இராஜிமாச் செய்துள்ளார்.
 
கடந்த2015பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் இ.த.அ.கட்சி சார்பில் போட்டியிட்ட க.கோடீஸ்வரன் 17799வாக்குகளைப்பெற்று தெரிவானார். அடுத்த அதிகூடிய 14723வாக்குகளைப்பெற்றவர் த.கலையரசன்.
இம்முறை த.அ.கட்சி எந்த ஆசனத்தையும் பெறவில்லை.ஆதலால் வேட்பாளர்களது விருப்புவாக்குகள் வெளியாகவில்லை. எனினும் உத்தியோகப்பற்றற்றதகவலின்படி அதிகூடிய விருப்பு வாக்குகளை இம்முறை த.கலையரசனே பெற்றுள்ளதாகக்கூறப்படுகிறது.எனினும் கட்சி போதிய வாக்குகளைப்பெறாமையினால் ஆசனம் இழக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts