தாந்தாமலையில் இனங்காணப்பட்ட கொரனா தொற்றாளர் -21நாட்களுக்கு பின்னர் அடையாளம்

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாந்தாமலைப்பிரதேசத்த்தில் ஒருவருக்கு கொரனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் தொற்றாளர்கள் எண்ணிக்கை 75ஆக அதிகரித்துள்ளதாக கிழக்குமாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

 

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்குவந்தவர் எனவும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் 21 நாட்களுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவருடன் பழகியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை பட்டிப்பளை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் சேவைகள் திணைக்களம் மற்றும் பொலிஸார் படையினர் இணைந்து முன்னெடுத்துவருகின்றனர்.

இன்றுடன் கிழக்கு மாகாணத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 119 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related posts