திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவு

திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் புதிய நிர்வாகசபைத் தெரிவு இன்று 05 ஆம் திகதி மூதூர் கிளிவெட்டியில் அமைந்துள்ள இந்து குருமார் சங்க பிரதான காரியாலயத்தில் அதன் தலைவர் சிவஶ்ரீ இ. பாஸ்கரன் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
இத்தெரிவானது அண்மைக்காலத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையின் சாதக பாதக நிலைகள் தெடர்பாக இடம்பெற்ற பிரச்சினைகளின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் புதிய நிர்வாக தெரிவும்  நடைபெற்றது.
அந்தவகையில் தலைவியாக செல்வராஜா சறோஜாதேவி, உபதலைவியாக கு.தில்லையம்மா, செயலாளராக ப.சர்மிளா, உபசெயலாளராக செள.கோமளாதேவி பொருளாளராக ஆ.பாலசறோஜினி. ஆலோசகர் இ.பாஸ்கரன் குருக்கள் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் சங்கத்தினூடாக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டங்கள் தொடர்பாக புதிய அரசாங்கத்தை கவணம் செலுத்தி காணாமல் போனவர்களுக்கான தீர்வுகளை பெற்றுத்தரவேண்டும் அதுவரை எமது போராட்டங்கள் தொடரும் எனவும் முடிவெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts