திருக்கோவில் பிரதேசத்தில் வீசிய மினி சூராவளி வீடு மற்றும் வர்த்தக நிலையம் முற்றாக சேதம்

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வீசிய மழையுடனான மினி சூறாவளி காரணமாக திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் சந்தியில் அமைந்துள்ள வீடு மற்றும் வர்த்த நிலையம் என்பன முற்றாக சேதமடைந்துள்ளன.

இவ் திடீர் அனர்தமானது நேற்று புதன்கிழமை மாலை(17) சுமார் 4.30 மணியளவில் இடம்பெற்று இருந்ததுடன் மழையுடன் வீசிய பலத்த காற்றில்  சிக்குண்டு வீடும் வர்த்தக நிலையமும் முற்றாக சேதடைந்துள்ளதாக உரிமையாளர் பாலசுந்தரம் பத்மா தெரிவித்து இருந்தார்.

இவ் அனர்த்தம் ஏற்பட்ட வேளை கடைக்குள் தேனீர் அருந்தவதற்காக பல இருந்ததாகவும் திடீர் என பாரிய சத்தத்துடன் கடையில் மற்றும் அதனோடு இணைந்து அமைந்துள்ள தனது வீட்டின் கூரையின் சீட்டுக்கள் அனைத்தும் தூக்கி பிரதான வீதியில் வீசப்பட்டதுடன் யாருக்கும் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இன்றி தெய்வாதினமாக தப்பித்துக் கொண்டதாகவும் தெரிவித்து இருந்தனர்.

இவ்வாறு மினி சூறாவளி அனர்த்தம் காரணமாக  வீடும் மற்றும் வர்த்தக நிலையமும் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் இவ் அனர்த்தம் தொடர்பாக அப்பகுதி கிராம உத்தியோகத்தர் மற்றும் திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்கும் தகவல் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார் 

Related posts