தி.மு.க கட்சியின் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தெரிவு

தி.மு.க கட்சியின் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மறுதினம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க பொதுக்குழு கூட்டம் நாளை மறு தினம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுவுள்ளது. இதன்போது, தி.மு.க. கட்சியின் தலைவர், பொருளாளர் தேர்தல் நடைபெறவுள்ளது.

தலைவர், பொருளாளர் பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டன. இதில் தி.மு.க பொதுக்குழுவில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு உள்ளவர் வெற்றிபெறுவார்.

பொதுக்குழு கூட்டத்தில் தலைவர், பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தலைவர் பதவிக்கு தற்போதைய செயல்தலைவர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்

எனினும், ஸ்டாலினுக்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு தாக்கல் செய்ய காலஅவகாசம் இன்று மாலை 4 மணியுடன் முடிவடைந்ததுஎனினும், ஸ்டாலினுக்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு தாக்கல் செய்ய காலஅவகாசம் இன்று மாலை 4 மணியுடன் முடிவடைந்தது

Related posts