துறைநீலாவணைக் கிராமத்தில்; மூன்று வேலைத்திட்டகள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு


(சா.நடனசபேசன்)
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் துறைநீலாவணைக் கிராமத்தில் 45 இலட்சம் ரூபா நிதியில் மூன்று வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு 11 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.
தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்தின் தெற்கு வாசலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் அண்ணா சனசமூக நிலைய வீதிக்கு கொங்கிறீட் வீதியாக செப்பநிடுவதற்கான ஆரம்பநிகழ்வும் கொங்கிறீட்வீதியாக புனரமைக்கப்பட்ட ரான்ஸ்போமர் கிழக்கு வீதியை மக்களுக்குக் கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இதன் பின்னர் மக்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் நிகழ்வு தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத் தலைவர் கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதியாக மட்டக்களப்பு மவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மண்முனைத் தென் எருவில்பற்று பிரதேசசபைத் தவிசாளர் ஞா.யோகநாதன் பிரதேசபை உறுப்பினர் க.சரவணமுத்து மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்

OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA

Related posts