துறைநீலாவணையினைச் சேர்ந்த வைத்திய கலாநிதி செல்லத்துரை சிவதாசன் அவர்களால் ; போட்டக்கொப்பி இயந்திரம் வழங்கிவைப்பு.

பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட துறைநீலாவணை விபுலானந்த வித்தியாலயத்திற்கு துறையூர் கவிஞர் ஓய்வுநிலை அதிபர் அமரர் க.செல்லத்துரைஇபாரியார் ஆசிரியை அமரர் திருமதி; தங்கநாயகம்.செல்லத்துரை ஆகியோரின் ஞாபகார்த்தமாக அவர்களது புதல்வர் வைத்தியர்  செ.சிவதாசன்; (Gastroenterologist.) அவர்களது சொந்த நிதியின் மூலம் போட்டக் கொப்பி இயந்திரம் வழங்கிவைக்கும் நிகழ்வு புதன்கிழமை 26 ஆம் திகதி;  ஊடகவியலாளரும் ஆசிரியருமான சா.நடனசபேசன் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது.

பாடசாலையின் தேவையினை அறிந்த கவிஞர் ஓய்வுநிலை அதிபர் அமரர் செல்லத்துரை ஐயா அவர்களது புதல்வர் அவுஸ்ரேலியாவில் வசிக்கும் வைத்தியர் செ.சிவதாசன் (Gastroenterologist.) 1,40000 ரூபாய் பெறுமதியான போட்டக்கொப்பி இயந்திரம் தனது பெற்றோர்களின் ஞாபகார்த்தமாக பாடசாலையின் அதிபர் எஸ்.டில்லிநாதன் மற்றும் ஆசிரியர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் துறைநீலாவணை தில்லையம் பலப்பிள்ளையார் ஆலயத்தின் தலைவர் எஸ்.கணேசமூர்த்தி செயலாளர் எஸ்.அரியானந்தம்,துறைநீலாவணை தெற்கு 1 கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் த.அழகரெத்தினம்,செயலாளர் க.குணரெத்தினம்,சித்திவிநாயகர் ஆலயத்தின் செயலாளரும் ஊடகவியலாளரும் ஆசிரியருமான இ.சுதாகரன்,முத்துமாரியம்மன் ஆலயத் தலைவர் மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு போட்டக்கொப்பி இயந்திரத்தினை வழங்கிவைத்தனர்.

Related posts