துறைநீலாவணை கண்ணகியம்மன் ஆலயத்தின் கன்னிக்கால் வெட்டும் நிகழ்வு இன்று மாலை

மட்டக்களப்பு துறைநீலாவணை அருள்மிகு ஸ்ரீ கண்ணகியம்மன் ஆலயத்தின் சிலம்பு அபிஷேகமும் கன்னிக்கால் வெட்டும் நிகழ்வு இன்று 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற இருக்கின்றது.

அம்மனுடைய திருக்கதவானது கடந்த செவ்வாய்க்கிழமை 22 ஆம்திகதி  திறக்கப்பட்டு  விஷேட பூசைகள் நடைபெற்றதுடன் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அம்மனுடைய ஊர்வலம் இடம்பெற்றது.

28 ஆம்திகதி திகதி அபிஷேகப் பூசைகளும் அன்று இரவு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறஇருப்பதுடன் 29 ஆம்திகதி செவ்வாய்க்கிழமை திருக்குளுர்த்தியுடன் உற்சவம் நிறைவுபெற இருக்கிறது.

Related posts