துறைநீலாவணை கண்ணகி சனசமூக நிலைய ஆங்கில மொழியிலான பாலர் பாடசாலையில் கெளரவிப்பு நிகழ்வு

மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச க
சபையின் அனுசரனையுடன் இயங்கி வரும் துறைநீலாவணை கண்ணகி சனசமூக நிலைய முன்பள்ளி பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்றலும் பழைய மாணவர்களை கெளரவித்து தரம் ஒன்றிக்கு வழி அனுப்பும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 9மணிக்கு அமைப்பின் தலைவரும் ஊடகவியலாளருமான இ.சுதாகரன் தலைமையில் நடைபெற்றது.
 
நிகழ்வில் மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் மற்றும் பிரதேச சபையின் துறைநீலாவணை கிராம வட்டார உறுப்பினர் கா.சரவணமுத்து, சனசமூக நிலையத்தின் செயலாளர் இ.பவப்பிரகாசன்,பொருளாளர் தி.கோகுலராஜ் ,ஆசிரியர்கள் ,பெற்றோர்,மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 
இதன் போது பழைய மாணவர்கள் புதிய மாணவர்களை மாலை அணிவித்து வரவேற்றதுடன் பழைய மாணவர்கள் அதிதிகளினால் பதக்கம் அணிவித்தும், நினைவுச் சின்னம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts