துறைநீலாவணை தில்லையம்பலப் பிள்ளையார் ஆலய வளர்ச்சிக்கு வித்திட்ட மா.கு.கணேசதுரைக் குருக்கள் ஐயாவின் சிரார்த்ததின நிகழ்வு.

தேவரெத்தினம் முகுந்தன்  

ஆலயப் பொருளாளர்

துறைநீலாவணை தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயம்

துறைநீலாவணை ஸ்ரீ தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்தினையும் இக்கிராம மக்களையும் நேசித்தவரும் வழிநடாத்தி வந்தவரும்  எந்த வித வேதனத்தையும் எதிர்பாராது தொடர்ச்சியாக 63 வருடங்கள் பூசகராக இறைபணி  ஆற்றிய நிலையில்  2011 ஆம் ஆண்டு மரணமடைந்த மா.கு.கணேசதுரைக் குருக்கள் ஐயா அவர்களது சிரார்த்த தினம் இன்று இடம்பெறுகின்றது

இவர் இவ்ஆலயத்தின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய  மதிப்புக்கும் வணக்கத்துக்கும் உரிய மகான் மா.கு.கணேசதுரைக் குருக்கள் ஐயா அவர்கள் 2011.10.10. அன்று இறைவனடி எய்தினார்.

இவர் பாண்டிருப்பை வசிப்பிடமாக கொண்டிருந்தாலும் இக்கிராம மக்களையே அதிகம் நேசித்தவர்.அந்த வகையில் இவரின் இழப்பு இக்கிராம மக்களுக்கு பேரிழப்பாகும்.இவரின் ஆன்மீக சேவைக்கு நிகராக இன்று யாருமில்லை என்றுதான்கூற வேண்டும். அன்று தொடக்கம் இன்று வரையும் ஐயாவின் நினைவுகள் என்றென்றும் மக்களின் மனங்களிலிருந்து நீங்காது அவர்களால் பூசிக்கப்பட்டுக் கொண்ருக்கின்றார்.அந்த வகையில் அவருடைய 10. வது வருட சிரார்த்த தின திதி நிகழ்வு இன்று ஆலயத்தில் இடம் பெறவுள்ளது. நாம் அவரின் ஆத்ம ஈடேற்றத்திற்காக பிரார்த்திப்போமாக.

 

Related posts