துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலயத்தில் பக்திப்பாமாலை வெளியீடு

துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலயம் தொடர்பாக உருவாக்கப்பட்ட மாரியம்மன் பக்திப் பாமாலையினை வெளியீட்டு வைக்கும் நிகழ்வு ஆலையத் தலைவர் மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இப்பாடலானது அம்பிளாந்துறை கவிஞர் அழகுதனு அவர்களின் கைவண்ணத்தினால் படைக்கப்பட்டு இறுவட்டாக வெளியீட்டுவைக்கப்பட்டது.

இந் நிகழ்வானது ஆலயத்தின் பிரதம குரு சிவசிறி த.சுதந்திரன் குருக்கள் அவர்களது ஆசியுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டசெயலகத்தின் பிரதம கணக்காளர் க.ஜெகதீசன் மற்றும் ஆலயங்களின் தலைவர்கள் பாடசாலைகளின் அதிபர்கள் கிராசேவகர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது இதற்கான நிதி அனுசரணையினை க.அருச்சுணன்,ந.குபேதன் ஆகியோர் வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது

Related posts