தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் செயல்பாடுகள் மாவட்ட மட்டத்தில் மீண்டும் ஆரம்பம்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண  சூழ்நிலை  காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த   தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் செயல்பாடுகள்  மீண்டும் மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
 
அந்தவகையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்  33வது  மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டு  போட்டிகள்  மாவட்ட ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
 
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டு போட்டிகள் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகின்றது. 
 
இவ்வாறு ஆரம்பித்து வைக்கப்பட்ட  33 வது மாவட்ட மட்ட விளையாட்டு  போட்டிகள்  சுகாதார நடைமுறையின் கீழ்  மாவட்ட இளைஞர் உத்தியோகஸ்தர்கள், மாவட்ட இளைஞர் கழக சம்மேளன அங்கத்தவர்கள், விளையாட்டு  வீர வீராங்கனைகள் ,விளையாட்டு உத்தியோகத்தர்கள் என மட்டுப்படுத்தப்பட்ட அங்கத்தவர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.  
 
ஆண் பெண் இருப்பாளர்களுக்கான கரப்பந்தாட்ட  போட்டிகள்  ஆரம்பித்து வைக்கப்பட்டு இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Related posts