தேரரிடம் கப்பம் கோரிய மூவர் சிக்கினர்

ரங்கிரி – தம்புள்ளை ரஜமஹா விகாரைக்கு பொறுப்பான விகாராதிபதி அம்பகஸ்வெவ ராகுல தேரரிடம் 10 கோடி ரூபா கப்பம் கோரிய மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ரங்கிரி – தம்புள்ளை ரஜமஹா விகாரைக்கு பொறுப்பான விகாராதிபதி அம்பகஸ்வெவ ராகுல தேரரிடம் கடந்த மாதம் 20ஆம் திகதி 10 கோடி ரூபா கப்பம் கோரியுள்ளனர்.

இது தொடர்பில் ரங்கிரி – தம்புள்ளை பொலிஸாருக்கு மறுதினம் முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

அதனடிப்படையில் தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், நேற்று இரவு மூவரை கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் தமது வீடுகளில் இருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்புள்ளை பிரதேசத்தை சேர்ந்த இருவரும் மற்றும் சீகிரிய பிரதேசத்தை சேர்ந்த ஒரு நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts