நாடு முழுவதும் பலத்த காற்று

நாடு முழுவதும் பலத்த காற்று வீசலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக நாட்டின் மத்திய, வட மேல், வட மத்திய, தென், சபரகமுவா, மேல் மாகாணங்களிலும், மட்டக்களப்பு, திருகோணமலை, பதுளை மாவட்ங்களிலும் பாரிய காற்று வீசலாம் எனவும் இது மணிக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரை உயர்வாக காணப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை, மொணராகலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்ங்களில் ஓரளவு பலத்த காற்று வீசலாம் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts