நாட்டின் சில பாகங்களில் காற்றுடன் கூடிய மழை

ஹம்பாந்தோட்டை முதல் மட்டக்களப்பு வரை மற்றும் மன்னார் தொடக்கம் புத்தளம் வரையிலான கடற்பிராந்தியங்களில் அதிகளவிலான காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மணித்தியாலத்திற்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் அதிகரித்த வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, மீனவர்கள் மற்றும் கடல்சார் தொழிலில் ஈடுபடுவோரை அவதானமாக செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

வட கிழக்கு மற்றும் தென் மேற்கு கடற்பிராந்தியங்களில் மேகமூட்டமான காலநிலையே மேலும் சில மணிநேரங்களுக்குத் தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts