நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று (10) மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என, வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, ஊவா, மத்திய, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கு அதிகமாக பலத்த மழை பெய்யக்கூடுமென, திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related posts