நாட்டில் 93 கொவிட் மரணங்கள்

நாட்டில் 93 கொவிட் மரணங்கள் நேற்று (19) உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (20) அறிவித்தார்.குறித்த அனைவரும் நேற்றைய தினம் (19) உயிரிழந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,218 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்று இதுவரையில் 1,509 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 506,000 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, கோவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 433,093 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts