நான் தயார்! விசேட அறிவிப்பில் கோட்டாபய வெளியிட்ட தகவல்கள்

புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையை ஒழிப்பதற்கு தான் தயார் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

இன்றிரவு 9 மணிக்கு வெளியிட்ட விசேட அறிவிப்பில் இதனைக் கூறியுள்ளார்.

19ஆவது திருத்தம் விரைவில் வலுப்படுத்தப்படும். நாடு வழமைக்கு மாறிய பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

 

இந்த வாரத்திற்குள் நாடாளுமன்றில் பெரும்பான்மையைக் கொண்டுள்ள, மக்களின் நம்பிக்கையை வென்ற ஒருவரை பிரதமராகவும், புதிய அமைச்சரவையையும் நியமிக்க முடியுமென இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.

Related posts