நாளை நள்ளிரவு முதல் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சைகள், கருத்தரங்குகளுக்கு தடை

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சைகள், மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் என்பனவற்றிற்கு நாளை (27) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித தெரிவித்துள்ளார்.

இந்த விதிமுறையை மீறுவோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

தடையை மீறி செயற்படுவோர் குறித்து பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், 011 2784208 , 011 2784537, 011 3188350 அல்லது 011 3140314 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், முறைகேடுகள் இடம்பெறும் பட்சத்தில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யமுடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts