நாவற்குடாவில் ஏற்பட்ட விபத்தில் ஆசிரியர் உயிரிழப்பு !

மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் வெள்ளிக்கிழமை (31)  ஏற்ப்பட்ட விபத்தில் விக்னேஸ்வரா என்பவர் உயிரிழந்துள்ளார். மோட்டர் சைக்கிளில் பயணித்த நபரை சிறிய ரக வாகனம் ஒன்று மோதியதிலேயே இவ் விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாவற்குடாவைச் சேர்ந்த குறித்த நபர்  ஒரு ஆங்கிலப்பாட ஆசிரியர் என்பதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணையை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts