நிந்தவூர் பரமன்நடுக்கண்டத்தில் அறுவடைக்கு தயாரான        23 ஏக்கர் வயல் காணிகள் யானைகளால் துவம்சம் 

நிந்தவூர் பிரதேச செயலகத்தின் எல்லைக்கு உட்பட்ட நிந்தவூர் கமநல சேவைகள் பிரிவின் பரமன்நடுக்கண்டத்தில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த சுமார் 23 ஏக்கர் வயல் காணிகளை யானைகள் முற்றாக நாசம் செய்து உள்ளன.

தமிழர்கள் மூவர், முஸ்லிம்கள் மூவர் ஆகியோருக்கு சொந்தமான வயல் காணிகளை யானைகள் புகுந்து துவம்சம் செய்ததில் மொத்தமாக சுமார் 40 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பாக நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையம், நிந்தவூர் பிரதேச செயலகம், சம்மாந்துறை பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையம் இவர்களுக்கான இழப்பீடுகளை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கின்றது.

Related posts