நீண்டகாலமாக இருள்சூழ்ந்து காணப்பட்ட விளையாட்டு மைதானத்திற்கு மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டது

நீண்டகாலமாக இருள்சூழ்ந்து காணப்பட்ட விளையாட்டு மைதானத்திற்கு மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டது.

கோட்டைக்கல்லாறு பொது விளையாட்டு மைதானத்திற்கான மின்சார இணைப்பிற்கான வேலைகள்  சனிக்கிழமை(21)நடைபெற்று மின்சாரம் வழங்கப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக
விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் எண்ணக்கருவின் அடிப்படையில் தமிழ் மக்கள்  விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும்,முன்னாள் கிழக்கு மாகாண முதல் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினரும் ,மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஆலோசனைக்கு அமைவாக கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் களுதாவளை பிரதேச சபை உறுப்பினர் த.சுதாகரனின் ஏற்பாட்டில் கோட்டைக்கல்லாறு விளையாட்டு கழகங்களின் முழுமையான பங்களிப்புடன் பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட 15இலட்சம் ரூபா நிதியில்  கோட்டை க்கல்லாற்றில் பொது விளையாட்டு மைதானத்தை புணரமைப்பு செய்வதற்கான திருத்தவேலைகள்  கடந்த 2021.5.20ஆம்  திகதி நடைபெற்று முடிந்தது.

இதற்கமைவாக குறித்த விளையாட்டு மைதானம் நீண்டகாலமாக இரவில் இருள்சூழ்ந்து விளையாட்டு பயிற்ச்சிகள் இடம்பெறாமலும்,விளையாட்டு நிகழ்வுகள் நடாத்துவதற்கு மின்சாரம் இல்லாமல் காணப்பட்டது.இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் கோட்டைக்கல்லாறு பொது விளையாட்டு கழகங்கள் ஒன்றிணைந்து தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மண்முணை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபை உறுப்பினர் த.சுதாகரனிடம் விடுத்த கோரிக்கை அமைவாக கட்சியின் பொதுச்செயலாளர் ஊடாக கட்சியின் தலைவரின் கவனத்துக்கு  தெரியப்படுத்தியதற்கு அமைவாக குறித்த விளையாட்டு மைதானத்தின் விளையாட்டு மைதானத்திற்கான  மின்சாரத்தூண்கள் நடப்பட்டு மின்சார இணைப்பு வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த மின்சார இணைப்பு வேலைத்திட்ட நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் த.சுதாகரன்,கோட்டைக்கல்லாறு விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள், கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டார்கள்.

Related posts