மசாஜ் நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக தவலத்துகொட நகரில் சட்டவிரோதமாக நடத்தி செல்லப்பட்ட மசாஜ் நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இன்று மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் 8 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலான ஊழல் ஒழிப்பு பிரிவால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, 20 முதல் 30 வயதிற்கு இடைப்பட்ட பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அம்பாறை, மஹரகம, காலி, மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னரும் இந்த நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

எனினும் அதன்போது தப்பிச் சென்றிருந்த உரிமையாளர், இந்த சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக வலான ஊழல் ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts