நீர் நிறப்பப்பட்ட வாளியில் தவறிவிழுத்து குழந்தை உயிரிழப்பு-கிராமமே சோகத்தில்

கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பன்சேனை உன்னிச்சைப் பகுதியைச்சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை நீர் நிறப்பப்பட்ட வாளியில் தவறிவிழுத்து உயிரிழந்துள்ளசம்பவம் 28 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை மாலை இடமபெற்றுள்ளது.

இதில்  பன்சேனையினைச் சேர்ந்த 2 வயதுடைய இந்திரகுமார் றுஸ்மிதன் உயிரிழந்துள்ளார்
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் இறந்த குழந்தையும் அதேவயதினை உடைய அயல்வீட்டுக்குழந்தையும் வீட்டுமுற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது முற்றத்தில் நீர் நிறப்பி வைக்கப்பட்டிருந்த வாளியில் குழந்தை விழுந்துள்ளது.
 

 குழந்தையின் அழுகுரலைக் கேட்ட தாய் ஓடிவந்து பார்த்தபோது குழந்தை நீருக்குள் கிடப்பதைக் கண்டெடுத்து மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோது குழந்தை இறந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் பணிப்புக்கமைய திடீர் மரணவிசாரணை அதிகாரி சந்திரவதனா நிஸ்ரமானந்தராசா சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தினை பிரேதபரீசோதனைக்காக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளார்

மேலதிக விசாரணையினை கொக்கட்டிச்சோலைப் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்
 

Related posts