நேற்று கல்முனை தமிழ்ப்பகுதிகளில் 101 பிசிஆர் அன்ரிஜன் சோதனை! முடிவுகள்

கடந்த 4 தினங்களாக முடக்கப்பட்ட கல்முனையின்இ வடக்கு தமிழ் பிரதேசத்தில் நேற்று(31)வியாழக்கிழமை மாலை பிசிஆர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கல்முனைவடக்கு சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் ஆர்.கணேஸ்வரன் தலைமையிலான சிரேஸ்ட பொதுச்சுகாதார பரிசோதகர் எ.எல்.எம்.ஜரீன், பொதுச்சுகாதார பரிசோதகர்களான  சா.வேல்முருகு, எஸ்.யோகானந்தம், பி.எம்.எம்.தஸ்றீன், மற்றும்  சிரேஸ்டஆய்வுகூடபரிசோதகர் ஆர்.அகிலன் உள்ளிட்ட சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட எழுந்தமான சோதனையில் 101 தமிழ்சிங்கள மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள். அனைவருக்கும் நெகடிவ் பெறுபேறு கிடைத்திருக்கிறது.அவர்கள் சோதனைக்குட்படுத்தப்படுவதைக்காணலாம்.

Related posts