பகடிவதை மாணவியொருவர் கைது ! மூவர் வைத்தியசாலையில்

பேராதனை பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகடிவதைத் தொடர்பில் 2 விசாரணைனகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகம் ஊடாகவும்  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைபாட்டுக்கு அமைய பேராதனை பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

குறித்த பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவியொருவரால் தாக்குதலுக்கு இலக்கான மாணவிகள் மூவர் பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவி ​நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts