பட்டிருப்பு கல்வி வலயத்தில் கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்திக்கான கலந்துரையாடல்

கிழக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு கல்வி வலயங்கள் ரீதியாக கலந்துரையாடல் நடைபெற்று வருகின்றது. இந்த வகையில் க.பொ.த.சாதாரணப் பரீட்சையின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்கான கலந்துரையாடல் பட்டிருப்பு கல்வி வலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த 24.09.2018 ஆம் திகதி களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம்.ரி.ஏ. நிசாம், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆர்.சுகிர்தராஜன், மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள், பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், பட்டிருப்பு கல்வி வலயப் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

Related posts