பரீட்சைகள் கால வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் இறுதியாண்டுப் பரீட்சைகள் கால வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் இறுதிப் பரீட்சகைள் குறிப்பாக 2020ம் ஆண்டு மற்றும் 2021ம் ஆண்டுக்கான பரீட்சைகள் ஒத்தி வைக்கப்படுவதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவி வரும் கோவிட்19 பெருந்தொற்று நிலைமைகளினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி முதல் 26ம் திகதி வரையில் வரையில் இறுதியாண்டுப் பரீட்சை நடாத்தப்படவிருந்தது. பரீட்சை திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts