பற்றிமா பிரதிஅதிபர் அருட்சகோதரி வண.சுதர்சினிக்கு பிரியாவிடை!

கல்முனை கார்மேல் பற்றிமா தேசியகல்லூரியின் பிரதி அதிபராக 10வருடங்களாக சேவையாற்றிய அருட்சகோதரி வண. எம். சுதர்சினி அம்மையாருக்கு சேவைநலன்பாராட்டுவிழா வெள்ளியன்று நடைபெற்றது.
 
அதிபர் அருட்.சகோ.சந்தியாகு செபமாலை தலைமையில் பிரியாவிடை நிகழ்வு கல்லூரியில் கோலாகலமாக  (18) நடைபெற்றது. 
 
அருட்சகோதரி சுதர்சினி திருமலை புனித.மரியாள் கல்லூரிக்கு சுப்பிறீயர் பதவியுயர்வுபெற்று இடமாற்றம் பெறுவதனையொட்டி இவ்வைபவம் நடைபெற்றது.
 
மாணவர்கள் ஆசிரியர்களின் கண்ணீருடன் விடைபெற்ற அருட்.சகோதரி சுதர்சினியின் சேவைகளைப் பலரும் பாராட்டிப்பேசினர்

Related posts