பலாலி விமான நிலையத்தை எந்தவொரு நாட்டுக்கும் வழங்கப்போவதில்லை – நிமல்

யாழ் பலாலி விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகளை எந்தவொரு வௌிநாட்டிற்கும் வழங்கப்போவதில்லை என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

நாட்டில் உள்ள ஆறு விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பில்  (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

திகன விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக ஒரு நிபுணர் குழுவை அமித்துள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் கூறினார். இந்த குழுவானது அபிவிருத்தி முயற்சிகளை மீளமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் மதிப்பீடு செய்யும் எனவும் அவர் கூறினார்.

அத்துடன் இரத்மலானை, மட்டக்களப்பு, பலாலி, சிகிரியா, கோகலை மற்றும் திகன விமான நிலையங்கள் ஆகியவை நாட்டின் விமான சேவையில் ஈடுபடுவதற்கான அபிவிருத்திகளை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், A320 ரக விமானங்களைத் தரையிறக்கும் வகையில் விமான ஓடுதளத்தை புனரமைக்கும் பணிகளை முன்னெடுப்பதற்கு தேவையான நிதியை வழங்க சிவில் விமான சேவை அதிகாரசபை மற்றும் அபிவிருத்தி சபை என்பன இணங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொள்ளாது புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related posts