பல்கலை மாணவர்களின் பேரணிக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு பேரணிக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றினால் உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழகத்தின் முன்னால் இன்று மதியம் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி தற்போதைய நிலையில் களனி – புதிய பாலத்தை அண்மித்துள்ளனர்.

குறித்த எதிர்ப்பு பேரணியை அமைதியான முறையில் மேற்கொள்ளுமாறு தெரிவித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் மற்றும் அரச நிறுவனங்களில் அத்துமீறி நுழைதலும் இதன் போது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் , பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்தார்.

Related posts