பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம்

வெயங்கொட தல்கஸ்மொட பகுதியில் அமைந்துள்ள ஆற்றில் நீராட சென்ற இரண்டு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இன்று மதியம் 1.30 மணியளவில் மாணவர்கள் நீராட சென்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

16 மற்றும் 17 வயதினையுடைய மாணவர்கள் இருவரும் மீட்கப்பட்டு வத்துபிடிவல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts