பாடசாலை மாணவி மீது கத்தி குத்து !

பாடசாலை மாணவியின் கழுத்தை வீதியில் வைத்து அறுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குறுமன்வெளியில் இடம்பெற்றுள்ளது.

காயங்களுக்கு உள்ளான மாணவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்வத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதான சந்தேக நபர் தலை மறைவாகியுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

வர்த்தக பிரிவில் மாவட்டத்தில் முதல் நிலையில் சித்தியடைந்து பல்கலை கழகத்தில் பயின்று வரும் மாணவர் ஒருவரே உயர்தரம் கற்று வரும் குறித்த மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்ததாக சம்பவம் தொடர்பில் தெரியவருகின்றது.மாணவி காதலை மறுத்தமையால் விபரிதம் ஏற்பட்டதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்

Related posts