பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அவர்களால் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அவர்கள் இன்று கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்திற்கு  விஜயம் செய்து பாடசாலை அதிபரை சந்தித்து பாடசாலையின் குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டதுடன்  கடந்த உயர்தர பெறுபேறுகள் தொடர்பாகவும் வினாவினார்.
கிண்ணையடி வாவிக்கு அப்பால் உள்ள பிரம்படித்தீவு கிராமத்தில் இருந்து தோணியின் மூலமாக பயணித்து வந்து இப்பாடசாலையில் உயர்தரம் பயில்கின்ற இரு மாணவர்கள்  பாடசாலைக்கும்  பிரத்தியேக வகுப்புகளுக்குச் செல்லவும் துவிச்சக்கரவண்டி இல்லாமல் சிரமப்படுவதாக சமூக நலன் விரும்பிகள் தெரிவித்தனர்.
 
அவர்களின் கோரிக்கைக்கு அமைய குறிப்பிட்ட மாணவர்களுக்கு இன்று சரஸ்வதி வித்தியாலயத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினரால் துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டது.

Related posts