பிரதான வீதியில் 3 நாட்களாக குழாய் உடைந்து பரவும் குடிநீர்

கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் குடிநீர் குழாய் மூன்று நாட்களாக உடைப்பெடுத்து காணப்படுகிறது.

 
கல்முனை இலங்கை போக்குவரத்து சபைக்கு அருகே இச்சம்பவம் இடம்பெற்ற நிலையில் அதிகளவான நீர் வெளியேறிய வண்ணம் கவனிப்பாரற்று காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
 
எனவே உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts