பிரதேசசபை உறுப்பினரும் சமூகசேவகருமான வினோ அவர்களால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

எஸ்.சபேசன்

 நாட்டில் கொவிட் 19 தாக்கம் அதிகம் காரணமாக தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ள வேளையில் அன்றாடம் கூலித்தொழில் செய்யும் பொதுமக்கள் உணவுக்காக பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதனைக் கருத்தில் கொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் களுதாவளை பிரதேசசபை உறுப்பினரும் சமூகசேவகருமான வினோ அவர்களால் 300 பேருக்கு  உலர் உணவுப் பொருட்கள் சனிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.

அதவது எருவில்  பட்டிருப்பு குருமண்வெளி கிராமங்களில் வசிக்கும் மொத்தம் 300 பேருக்கான உதவி அவர் மூலம் வழங்கிவைக்கப்பட்டது.

இவர் கடந்த காலங்களில் கொவிட் 19 வைரஸ் காரனத்தினால் நாடு முற்றாக முடக்கப்பட்ட வேளையில் இவர் மூலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது

Related posts