“பிறர் உயிர்க்காக எம் உதிரம் ஈய்வோம்” எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாம்.


“பிறர் உயிர்க்காக எம் உதிரம் ஈய்வோம்” எனும் தொனிப்பொருளில் கிரான்குளம் சன்பிளவர் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்திருந்த இரத்ததான முகாம் கிரான்கிளம் சரஸ்வதி வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் கழகத்தின் தலைவர் தவராசா சசுகரன் தலைமையில் நடைபெற்றது.
இரத்ததான முகாமானது அண்மைக்காலங்களில் மட்டக்களப்பு மாவட்ட இரத்த வங்கியில் நிலவும் உதிர பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்கோடு சன்பிளவர் கழகத்தின் சமூக ஒருங்கிணைப்பு பிரிவின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதன் போது களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்தவங்கி அதிகாரி டாக்டர். கிருஸ்ணவேனி சுஜீந்திரன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்தவங்கி ஊழியர்களும் பொதுச்சுகாதார வைத்திய அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு இவ்ர இரத்ததான முகாமில் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இம்முகாமில் 50 க்கு மேற்பட்ட இளைஞர்கள் யுவதிகள் மற்றும் பிரதேசவாசிகள் வருகைதந்து உதிரம் வழங்கிவைத்தனர்.

Related posts