பிலிப்பைன்ஸ் இலங்கைக்கிடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான 4 நாள்கள் உத்தயோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோவுக்குமிடையில் இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலையடுத்து, இருநாடுகளுக்குமிடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இருநாடுகளுக்கிடையில் காணப்படும் பாதுகாப்பு ,சுற்றுலா, விவசாயம், கல்வி, விவசாய தொழிநுட்பம் ஆகிய விடயங்களில் இருநாடுகளினதும் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பான  ஒப்பந்தங்களே இரு நாடுகளுக்கிடையில் கைச்சாத்தாகியுள்ளன.

Related posts