புதிய கோட்டக்கல்வி பணிப்பாளர் நியமனம்

பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென் எருவில்பற்றின் புதிய கோட்டக்கல்விப்பணிப்பாளராக இலங்கை கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த புருஷோத்மன் திவிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனத்தை கிழக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வழங்கியுள்ளார். துறைநீலாவணைக் கிராமத்தைச்சேர்ந்த இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைமாணி பட்டதாரியாகவும், தேசிய கல்வி நிறுவகத்தின் பட்டமேற் கல்வி நிர்வாக டிப்ளோமாவையும் கற்றுள்ளார்.
2013 இல் ஆசிரியர் சேவைக்குள் நுழைந்தவர் மண்முனை மேற்கு கல்வி வலயத்திலுள்ள பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயத்தில் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். அத்துடன் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts