புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினரின் ஊடக அறிக்கை

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் ஏற்பட்ட அசம்பாவிதங்களையும் அதற்கு காரணமானவர்களையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அரசியல் காரணங்களுக்காக சில குழுக்கள் இனக்கலவரம் ஒன்றை கிழக்கில் ஏற்படுத்த முயல்வதாக எமக்குதோன்றுகிறது.  இக் கலவரத்தை ஏற்படுத்தி சிங்கள தமிழ்இனங்களிடையே பிளவை தொடர்ந்து பேணுவதும் எதிர்வரும்தேர்தல்களில் அதன்மூலமாக வாக்குகளை சேகரிப்பதும் அதேவேளையில் இந்த நாட்டில் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்குஎதிராக தற்போது பாதுகாப்பு படைகள் எடுத்துவரும்நடவடிக்கைகளை குலைத்து தமிழரை நோக்கி திசைதிருப்புவதும்  இந்த இனவாதக் கட்சிகளின் நோக்கமாகும்.

இந்த இடத்தில் குழப்ப நிலையை ஏற்படுத்திய பிரதானிகளைப்பார்த்தால் அரச தரப்பினரும் அரசுக்கு ஆதரவு வழங்கும் தமிழ்இனவாத கட்சியொன்றின் செயற்பாட்டாளர்களும் என்பதைஅவதானிக்கலாம். இவர்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கு சட்டநீதி வழிமுறைகளை நாடாமல் வீதியில் இறங்கிகோஷமிடுவதனால் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களைதுரத்திவிடலாம் என்று தமிழ்  மக்களுக்கு கடந்த எழுபதுவருடங்களாக வழிகாட்டி வருபவர்கள்.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசீய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் கடந்த பத்து வருடங்களாக கிழக்கில் நிலவிவந்த அமைதி நல்லிணக்கம் என்பவற்றை தேர்தலுக்காக பலிகொடுக்க முனைகின்றனர்.

தமிழ் சிங்கள மக்களிடையே கடந்த நான்கு வருடகாலத்திற்குள் நிரந்தரமாக தீர்த்துவைக்கப்பட்டிருக்கவேண்டிய பல மரபுரிமை, காணிபிரச்சினைகளுக்கு இன்றுவரை தீர்வு காணாமல் பிரச்சனைகளை ஆறாத ரணங்களாக நீறு பூத்த நெருப்பாகவைத்துக்கொண்டிருந்து தேர்தல்கள் வரும்போதுஇரண்டுபுறமும் கைக்கூலிகளை வைத்து  அப்பாவி தமிழ்சிங்கள மக்களை மோதவைத்து அவர்களின் கண்ணீரிலும்செந்நீரிலும் பிணத்திலும் வேதனை நெருப்பிலும் பிரச்சாரம்செய்து வாக்குகளை சேகரித்து பாராளுமன்ற கதிரைசுகம்அனுபவித்து வரும் படித்த சட்டத்தரணிகளான தமிழ்பாராளுமன்ற பிரதிநிதிகள் நேற்றைய தினம் (18. 07. 2019)ஜனாதிபதியை சந்தித்து பிரச்சினைகளை எடுத்துக்கூறிதீர்வைப் பெற வழிவகை கூறவில்லை என்பதை தமிழ் மக்கள்அனைவரும் கவனிக்க  வேண்டும்.    

சட்ட  ரீதியாக பிரச்சினையை தீர்க்க விரும்பாமல் அவர்களும்அவர்களது நண்பர்களான அரச தரப்பும் இனக்கலவரத்தைமூட்டி அரசியல் செய்ய விரும்புகின்றனர். அதே வேளையில்தமது நட்புக்களான முஸ்லீம் பயங்கரவாதிகள் மீது பாதுகாப்புப்படைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வேறு திசைக்குதிருப்பி பயங்கரவாதிகளை காப்பாற்ற முனைகின்றனர். எனவேதமிழ் மக்கள் இப்படியான மத ஆக்கிரமிப்பு பிரச்சினைகளுக்குசட்டரீதியாகவே தீர்வு காணவேண்டுமேயல்லாமல்ஆர்ப்பாட்டம் செய்வதனால் கவுரவ ரணில் விக்கிரமசிங்கஅரசை அடிபணிய வைக்க முடியாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.   

இலங்கை அரசின் தொல்பொருட் திணைக்களத்தின்நடவடிக்கைகளே இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் மூலகாரணம் என்பதைக் காணலாம்.

இந்த அரசையும்  ஐ.நா. அமைப்புக்களையும் நாங்கள்கேட்டுக்கொள்வது என்னவென்றால் உடனடியாகதொல்பொருள் திணைக்கள அதிகாரிகளையும், பிரதேசசெயலக அதிகாரிகளையும் ஆளுநர் செயலகஅதிகாரிகளையும் இப்படியான இனமுறுகல் ஏற்படுவதற்குகாரணமாக கடமையில் உதாசீனமாக இருந்தமைக்கு கைதுசெய்து சதித்திட்டம் ஊழல் ஏதும் செய்துள்ளனரா எனவிசாரிக்க வேண்டும். மத அடிப்படையில் நில ஆக்கிரமிப்புமேலாண்மை தனி நபர் ஆதாயம் உருவாக்குவதற்கோ அல்லதுதென் பகுதி சுற்றுலா வியாபாரிகள் கிழக்கிலங்கை சுற்றுலாதலங்கள் விருத்தியடையாமல் தடுப்பதற்கோ யாருக்காவதுநிதிகளை வழங்கினார்களா என சம்பந்தப்பட்ட தரப்புகளைவிசாரித்து குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனைவழங்கவேண்டும்.

என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினரின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததுடன் இவ்வறிக்கையானது ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவர்களுக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா இன்று 24  ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts