பெண் கிணற்றில் பாய்ந்து தற்கொலை

காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட காத்தான்குடிப் பிரதேசத்தினைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில் மெத்தைப்பள்ளி வீதி காத்தான்குடியில் வசிக்கும் 56 வயதுடைய  வர்ஷாறைசான எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்

இவர் தான் வாழ்ந்துவந்த உறவினரின் வீட்டில் இருந்த கிணற்றிலே பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதுடன் மன நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவுக்கமைய காத்தான்குடி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலு மணிமாறன் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதோடு உடற்கூற்று பரிசோதனைக்காக உடலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கையளிக்குமாறு தடவியல் பொலிஸார் மற்றும் காத்தான்குடி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
 
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts