பெரிய கல்லாறு தேவ மகிமை ஊழியர்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

பட்டிருப்பு கல்விவலயத்திற்குட்பட்ட பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் பெற்றோரை இழந்த நிலையில் வறுமைக்கு மத்தியில் கல்வி கற்கும் மாணவர்களின் நலன் கருதி பெரிய கல்லாறு தேவ மகிமை ஊழியர்கள் அமைப்பினரால் வழங்கப்பட்ட ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலையின் முதல்வர்.சீ சசிதரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 
நிகழ்வில் பிரதி அதிபர். த.சசிகாந்தன் மற்றும் சிரேஸ்ட ஆசிரியை திருமதி பூ.ஏகாம்பரம், ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 
இதன்போது இனங்காணப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் கல்வியினைத் தொடர்கின்ற பெற்றோரை இழந்த சுமார்.பத்து மாணவர்களுக்கு பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts