பொ.உதயரூபன் அவர்களை வலயக் கல்வி அதிகாரியின் கணவர் தாக்கியமை கண்டிக்கத்தக்கது- ஜோசப் ஸ்ராலின்

வினாத்தாள் திருத்தும் பணிக்காக செல்லும் ஆசிரியர்களுக்கு எரிபொருளைப்பெற்றுக்கொடுப்பதற்காக எரிபொருள்நிரப்பு நிலையத்தில் காத்திருந்த எமது ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொ.உதயரூபன் அவர்களை  வலயக் கல்வி அதிகாரியின் கணவர் தாக்கியமை கண்டிக்கத்தக்கது. என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்

இன்று நடைபெற்ற ஊடகசந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்

நேற்று மட்டக்களப்பில் எரிபொருள்  நிரப்பு நிலையமொன்றில் முறைகேடாக எரி பொருள் பெற்ற வலயக் கல்வி அதிகாரியை கண்டித்தமையால் இவர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டதையடுத்து , மட்/ போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.தாக்கிய நபருக்கு எதிராக சரியான முறையில் சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்

 

Related posts